புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

புதிய புலனாய்வுப் பிரிவுகளை அமைக்க இலங்கை பொலிஸ் தீர்மானம்

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் அதன் குற்றப் புலனாய்வுத் துறையின் கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவை அடங்கும்.

மேலதிகமாக, மேல் மற்றும் தெற்கு மாகாணங்களைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் மாகாண குற்றப் பிரிவுகள் அமைக்கப்படும் என்றும் இலங்கைப் பொலிஸ் அறிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கான சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் நிதிக் குற்றம் மற்றும் சட்டவிரோத சொத்து விசாரணைகளை மேற்பார்வையிடுவார்.

இதேவேளை, ஆறு சிறப்புப் பிரிவுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், சைபர் குற்றம், மனித கடத்தல், கடல்சார் குற்றங்கள் மற்றும் உளவுத்துறை பகுப்பாய்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This