தயாசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தயாசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார்.

323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

இது தொடர்பில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரையும், கொள்கலன்களை விடுவித்த குழுவையும்தான் அழைக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அரசாங்கத்திற்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளை அடக்குவதற்கும் அரசாங்கத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

Share This