தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம்

தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம்

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது
மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share This