சவாலான பொறுப்பை நிறைவேற்ற தயார் – சஜித்

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என்ற செய்தியை மக்கள் அனுப்பியுள்ளனர் என்பதை 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்கள் ஆணைப்படி செயற்பட தானும் கட்சியும் தயாராக உள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்க்கட்சியின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து, நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பொய்களை முறியடித்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, உண்மையுள்ள மற்றும் வலுவான பொது சேவைக்காக ஒன்று சேர வேண்டும் என்பதே நாட்டு மக்கள் எமக்கு அளித்த செய்தி.
அந்த சவாலான பொறுப்பை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கான தலைமையை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். பொது மக்களின் கருத்துக்கு அடிபணிந்து, அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, மக்கள் எதிர்பார்க்கும் பொது சேவையையும், கொள்கைகளை மதிக்கும் ஒற்றுமையையும் வழங்குவதே எங்கள் நோக்கம்” என்றார்.