வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு

வரலாற்று தருணம் : பல தசாப்தங்களுக்குப் பிறகு லெபனான் – இஸ்ரேல் அதிகாரிகள் இடையே சந்திப்பு

லெபனான் மற்றும் இஸ்ரேலின் தூதுவர்கள் இடையே வொஷிங்டனில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தூதரக உறவுகள் இல்லாத இந்த இரு நாடுகளின் அதிகாரிகள் பல தசாப்தங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறையில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் மார்கோ ரூபியோவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறுகிறதென கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையே உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான வாய்ப்புகள்
குறித்து கலந்துரையாடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே நடைபெறும் மோதலை நிறுத்துவதற்கான முயற்சியில் லெபனான் ஈடுபட்டுள்ளது.

ஆனால், ஹிஸ்புல்லா நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் நிபந்தனை காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் உள்ளன.
மேலும், ஹிஸ்புல்லா இந்த முயற்சிகளை ஏற்க மறுத்துள்ளது.

அண்மைய மோதல்கள் லெபனானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )