நிலவும் வறட்சியால் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு – மின்சார சபை

நிலவும் வறட்சியால் மின் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு – மின்சார சபை

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைத் தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்க மட்டங்கள் குறைவடைந்து வருவதால் வாகனங்கள் மூலமான நீர் விநியோகம் அதிகரித்துள்ளது.

மேலும் பொதுமக்கள் நீரை வீண்விரயம் செய்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அதிக வெப்பம் மற்றும் எரிபொருள் எண்ணெய் ஆலைகள் செயற்பாட்டில் உள்ளதால், மின் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முழு திறனிலும் இயங்குகிறது, அதேவேளை நீர் மின்சாரம் பகல்நேர மின்உற்பத்தியில் 20 வீதமும் இரவு நேர மின் உற்பத்தியில் 40 வீதமும் பங்களிக்கிறது.

Share This