Category: இலங்கை
புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்
”புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு ... Read More
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக உயர்வு
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 21,000 ரூபாவாக காணப்படுகிறது. இந்நிலையில் முன்மொழியப்பட்ட ... Read More
தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – சபாநாயகரின் விசேட அறிவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வாக்குச் சீட்டுகள் ... Read More
பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்
மொனராகலை, தனமல்வில தலைமையக பொலிஸ்நிலைய அதிகாரிகள் குழுவொன்று ஊருஹெர பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை சுற்றி வளைத்துள்ளனர். அந்த கஞ்சா தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு பயிரிடப்பட்ட சுமார் இருபத்தைந்தாயிரம் கஞ்சா மரங்கள் ... Read More
பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை திருடிச் சென்ற நபர்
வடக்கு பயாகல சந்திப்பில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் இரவில் நுழைந்த நபர் ஒருவர், தொலைக்காட்சி மற்றும் ஒலிபெருக்கியைத் திருடிச் சென்றுள்ளார். பயாகல பொலிஸ் பிரிவில் உள்ள வடக்கு பயாகல சந்திப்பில் பேருந்தின் உரிமையாளர் இரவில் ... Read More
மண் சரிவு காரணமாக எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ... Read More
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித குமார மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு தலா ... Read More
செவ்வந்தியை தேடி அநுராதபுரத்தில் தேடுதல் வேட்டை
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்ல சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, அநுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ... Read More
டிரம்பின் அச்சுறுத்தலுக்கு இஸ்ரேல் அடிபணிந்தது
அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை இஸ்ரேல் நீக்கியுள்ளது. வர்த்தக நட்பு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் ... Read More
யாழில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன் – சாதனைப் புத்தகத்தில் பதிவிட முயற்சி
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ... Read More
குறைந்த விலையில் மக்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பம்
மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போசாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் "பெலெஸ்ஸ" உணவகத்தில் ... Read More












