ஒரு வருடத்திற்குப் பின்னர் கழிப்பறை குழியில் இருந்து மீட்டகப்பட்ட சடலம்

ஒரு வருடத்திற்குப் பின்னர் கழிப்பறை குழியில் இருந்து மீட்டகப்பட்ட சடலம்

கம்பஹா, இதுருகல்லே பகுதியில் உள்ள வீடொன்றின் கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருந்த ஒருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸாரால் நேற்று (08) மீட்கப்பட்டது.

இந்தக் கொலையில் பலியானவர் இதுருகல்லை பகுதியில் வசித்து வந்த 61 வயது திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கொலை 08.09.2024 அன்று இடம்பெற்றதாகவும், கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் கம்பஹா பொலிஸில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர்

சுமார் ஒரு வருட விசாரணைக்குப் பிறகு தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில், கடந்த ஆறாம் திகதி மூன்று நபர்களை பொலிஸார் கைது செய்தனர், அவர்களிடம் நடத்திய விசாரணையின் மூலம், கொலைக்கான மூல காரணம் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபரும் தொடர்புடைய மூன்று நபர்களும் ஒன்றாக மது அருந்தி விருந்து வைத்திருந்ததாகவும், அந்த நேரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவரை அடித்து, பின்னர் கழிப்பறைக்குள் தள்ளி மூடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மூன்று நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

Share This