யாழில் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும், போதைப்பொருட்களுடன் 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரே ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஒன்பது பேரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
