கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோக தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் புதன்கிழமை பத்து மணி நேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு அன்று காலை 08:30 முதல் மாலை 06:30 வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Share This