மண்சரிவு அபாய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

மண்சரிவு அபாய எச்சரிக்கை – அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பலத்த மழையுடனான வானிலை காரணமாக  பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்குமென தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொது மக்கள்
அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This