மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக, மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிகா ஜெயலத் கூறியுள்ளார்.

காய்ச்சல் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா ஒரே நுளம்பால் பரவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களில் 50 வீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் தம்மிகா ஜெயலத் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This