“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு
Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திலும் இந்த வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.