Category: முக்கிய செய்திகள்
‘விமானத்தில் சேதம்; அவசரமாக தரையிறங்க வேண்டும்’ – இந்திய விமானி கோரிக்கையை நிராகரித்த பாகிஸ்தான
டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் ஸ்ரீநகர் சென்றபோது திடீரென வானிலை மாறியதை அடுத்து, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி அனுமதி கோரியுள்ளார். அதற்கு அந்நாடு அனுமதி மறுத்துள்ளது. விமானத்தின் மூக்குப் பகுதியில் சேதம் ஏற்பட்டதைக் ... Read More
அம்பிட்டியே சுமனரதன தேரர் கைது
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய பீடாதிபதி அம்பிட்டியே சுமனரதன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் நடந்த ஒழுங்கீனமான நடத்தை சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உஹனா பொலிஸாரினால் ... Read More
மக்கள் ஆணையை அரசாங்கம் காட்டிக்கொடுத்துள்ளது – சஜித் குற்றச்சாட்டு
சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டில் திருத்தங்களைச் செய்வோம் எனக் கூறி பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட தற்போதைய அரசாங்கம், அந்த ஆணையை இப்போது காட்டிக் கொடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிலையியற் ... Read More
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 20 ஆபத்தான குற்றக் கும்பல் உறுப்பினர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்ய ஏற்கனவே சிவப்பு அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More
வெள்ளவத்தையில் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் – முன்னாள் அமைச்சர் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது
கொழும்பில் - வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு குடியிருப்பு தொகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ... Read More
கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் படையை ஆதரிக்க அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. நேற்று (22) கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை ... Read More
“உரிமையும் இல்லை, படுக்கையும் இல்லை” – நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பெண் குற்றச்சாட்டு
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த குற்றச்சாட்டில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவைச் சேர்ந்த முன்னாள் விமானப் பணிப்பெண் தனது சிறை வாழ்க்கை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளார். 21 வயதான சார்லோட் மே ... Read More
நல்லூர் முன்றலில் அசைவ உணவகம் – பெயர் பலகையை அதிரடியாக அகற்றிய மாநகர சபை
நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்றலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், ... Read More
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை விதித்தார் டிரம்ப்
புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதன்படி, தற்போது குறித்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சர்வதேச நாடுகளின் மாணவர்கள் உடனடியாக வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுமாறு ... Read More
கொழும்பு – வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி!! முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா?
கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸாரால் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி, முன்னாள் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் தொடர்புடையது என்பது நடந்து வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ... Read More
வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்
காணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான வட மாகாண மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் திடீரென இந்தப் பிரச்சினையில் ... Read More
நிஜ முகம் காட்டும் ”ஜே .வி.பி”
”தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடியுடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க, சிங்கள வாக்குவங்கியை பாதுகாக்க தமது முகமூடியை கழற்றி பழைய கடும்போக்குவாத, இனவாத ... Read More












