ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு

ருவன்வெல்ல பகுதியில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

தல்துவ-அமிதிரிகல வீதியின் மெதகொட பகுதியில் நேற்று மாலை (08) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அமிதிரிகலவிலிருந்து தல்துவ நோக்கிச் சென்ற கார், எதிர் திசையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, பின்னால் இருந்தவர் மற்றும் காரில் இருந்த மூன்று பயணிகள் சிகிச்சைக்காக அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் மூவர் பின்னர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This