நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!

நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது 190 பில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) இயக்குநர் ஜெனரல் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இம்முறை அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு பாரிய சேதம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பேரிடர் காரணமாக நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரழிவின் போது, ​​கண்டி மாவட்டம் முழுவதும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது, நகரத்தை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் அனைத்து நெடுஞ்சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, பேரிடரில் மின்மாற்றிகள் மற்றும் மின் கட்டமைப்பு நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணியில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளது.

நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரிடரினால் ஏற்பட்ட சேதம் மற்றும் மறுகட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கி பேரிடருக்குப் பிந்தைய விரைவான சேத மதிப்பீட்டை (GRADE) கணக்கிடவுள்ளது. அரசாங்கம் சுமார் இரண்டு வாரங்களுக்குள் மதிப்பீட்டு அறிக்கையை பெறும் என்று எதிர்பார்க்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )