
வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று மழை பெய்யக்கூடும்
நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனி நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், இதனால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
