யாழில் போதைப் பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது

யாழ் நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று( 29) மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபின் போது 25 வயதுடைய நான்கு இளைஞர்கள் யாழ் நகரப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் ஏழு போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
