அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

அமெரிக்க வரி வதிப்​பால் பாதிக்​கப்​படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

இந்​தி​யப் பொருட்​கள் மீதான அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றுமதி வர்த்​தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆடைகள், தங்க நகைகள், இரத்​தின கற்​கள், வெள்​ளிப் பொருட்​கள், தோல் பொருட்​கள், காலணி​கள் மற்றும் இரசாயனங்​கள்
உள்​ளிட்ட பல்​வேறு பொருட்​களுக்​கான முன்பதிவுகள் நிறுத்​தப்​பட்​ட​தால் ஏற்​றும​தி​யாளர்​கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்​திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்​வேறு வகைகளில் கவனம் செலுத்​தப்படும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு ஏற்​றும​தி​யாளர்​கள் எதிர்​கொள்​ளும் பணப்​புழக்க பிரச்​சினை​களை நிவர்த்தி செய்​தல், செயற்பாட்டு மூலதனத்​தின் மீதான அழுத்​தத்​தைக் குறைத்​தல், ஏற்​றுமதி தொடர்​புடைய துறை​களில் வேலை பாது​காப்பை உறுதி செய்​தல், புதிய சந்தை வாய்ப்​பு​களை ஏற்​படுத்​தி, உற்​பத்தி தடைப​டா​மல் இருக்​கச் செய்தல் என பல்​வேறு விடயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்​தொற்று காலத்​தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களுக்கு வழங்​கப்​பட்ட நிவாரண உதவி​களை போன்றவாறு
இருக்கும் என இந்த நிவாரணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்​நாட்டு நுகர்வை அதி​கரிக்​கும் வகை​யில் மத்​திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்​படுத்​தி​யுள்ள நிலை​யில் தற்​போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Share This