அமெரிக்க வரி வதிப்பால் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு நிவாரணம்

இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆடைகள், தங்க நகைகள், இரத்தின கற்கள், வெள்ளிப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் இரசாயனங்கள்
உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான முன்பதிவுகள் நிறுத்தப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசின் நிவாரணத் தொகுப்பு பல்வேறு வகைகளில் கவனம் செலுத்தப்படும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பணப்புழக்க பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல், செயற்பாட்டு மூலதனத்தின் மீதான அழுத்தத்தைக் குறைத்தல், ஏற்றுமதி தொடர்புடைய துறைகளில் வேலை பாதுகாப்பை உறுதி செய்தல், புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி, உற்பத்தி தடைபடாமல் இருக்கச் செய்தல் என பல்வேறு விடயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை போன்றவாறு
இருக்கும் என இந்த நிவாரணம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பை தொடர்ந்து உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்தியுள்ள நிலையில் தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.