மட்டு வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

மட்டு வவுணதீவு பொலிஸார் இருவர் படுகொலை – பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

மட்டக்களப்பு – வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகாமையில் இரு பொலிஸாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பிழையான தகவலை வழங்கிய அப்போது மட்டு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் கொழும்பில் வைத்து சந்தேநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2018 நவம்பர் 29ஆம் திகதி வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருந்த பொலிஸ் சாஜன் நிரோசன் இந்திரபிரசன்னா மற்றும் பொலிஸ் கொஸ்தாபர் டினேஸ் ஆகியோரை இனந் தெரியாதேரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்து அவர்களின் கைது துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் விடுதலைப்புலிகளில் இருந்து புனர்வாழ்வு பெற்ற வவுணதீவு கரையாக்கன் தீவு பகுதியைச் சேர்ந்த அஜந்தன் என்பவர் பாவித்து வந்த ஜக்கட் பாலத்தின் கீழ் கிடப்பதாகவும் அவர் இந்த படுகொலையை செய்ததாக அரச மற்றும் புலனாய்வு பிரிவினர் அறிக்கையிட்டதையடுத்து அவரை கடந்த 2018 நவம்பர் 30ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பிலுள்ள சிஜடி நான்காம் மாடியில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் 2019 ஏப்பிரல் 21 உயித்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த கபூர் மாமா என அழைக்கப்படும் ஸாரானின் சாரதியான முகமது ஆதம்லெப்பை, மில்ஹான், பிறதோஸ், நில்காம் ஆகிய நான்கு பேரை கைது செய்ததன் பின்னர் அவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்ட முன்னாள் பேராளியை விடுதலை செய்தனா.

இதனையடுத்து தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைக்பற்றியதையடுத்து இந்த உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மீண்டும் முன்னெடுத்த நிலையில் இந்த பொலிஸார் படுகொலைச் சம்பவத்தின் உண்மை சம்பவத்தை மூடிமறைக்கப்பட்டு விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி மீது சுமத்தப்பட்டதை கண்டறிந்தனர்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக அப்போது மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் தற்போது கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரை சிஜடியினர் கொழும்புக்கு விசாரணைக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (21) அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஏப்பிரல் எட்டாம் திகதி மட்டக்களப்பு கரடியனாறு தேசிய புலனாய்வு சேவை பிரிவில் கடமையாற்றிவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு வரை சிஜடியினர் கைது செய்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

CATEGORIES
TAGS
Share This