2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 15 பேர் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேகாலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 27,702 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது வாரத்திற்கு சராசரியாக 1,300 டெங்கு நோயாளர்கள் பதிவாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 101 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கும்.

 

Share This