நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும பதவி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி, ஜூன் 20 ஆம் திகதி முதல் ராஜினாமா அமுலுக்கு வருவதாக நாடாளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி சார்பில், தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.
பிரதி அமைச்சரின் இராஜினாமாவை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனிடையே நிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.