பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் விசேட ரயில் சேவைகள்

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரத்திற்கு 20 ரயில் சேவைகளும், அனுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கு 36 ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்தார்.
தேசிய பொசன் விழா அனுராதபுரம் நகரத்தின், புனித தலங்களான மிஹிந்தலை மற்றும் தந்திரிமலையை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொசன் வாரம் 13 ஆம் திகதி வரை தொடரும் நிலையில் வருகைத்தரும் பக்தர்களின் வசதிக்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருவதாக பொசன் குழு தெரிவித்துள்ளது.