ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

ஓய்வை அறிவிக்க தயாராகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

ஐபிஎல் 2025இன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பிளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளன.

ஜூன் மூன்றாம் திகதி இறுதி போட்டி நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐபிஎல்லில் அதிக இளம் வீரர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய ஐந்து வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.

மொயின் அலி

தற்போது 38 வயதாகும் மொயின் அலி டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல்லில் கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

இந்த ஆண்டு அவருக்கு அணியிலும் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். எனவே இந்த வருடத்தின் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

விஜய் சங்கர்

கடந்த சீசன் வரை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த விஜய் சங்கரை இந்த ஆண்டு மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் போதிய இம்பாக்டை கொடுக்க முடியவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மினி ஏலத்திற்கு முன்பு அணியில் இருந்து அவரை விடுவிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அவரை இனி எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பில்லை. இதனால் விஜய் சங்கர் ஓவை அறிவிக்கலாம்.

ஃபாஃப் டு பிளெசிஸ்

தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஃபாஃப் டு பிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல முக்கிய போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது 41 வயதாகும் அவர் கடந்தாண்டு வரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்த சீசனில் இரண்டு கோடிக்கு அவரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி வாங்கியது. இருப்பினும் அவரால் பழைய மாதிரி பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் இந்த சீசனுடன் அவர் ஓய்வை அறிவிக்கலாம்.

தோனி

மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் தலைவராக இந்த சீசனில் செயல்பட்டார். ருதுராஜ் கைக்குவாட்டிற்கு காயம் ஏற்பட்ட காரணமாக அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் தோனி ஓய்வு அறிவிப்பாரா என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இந்த சீசனில், அடுத்த ஆண்டு வருவேனா வரமாட்டானா என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது 44 வயதாகும் தோனிக்கு முட்டி காலில் பிரச்சினை அதிகளவில் இருந்து வருகிறது. எனவே அவரது முடிவு இந்த ஆண்டுக்குள் தெரிந்துவிடும்.

அஸ்வின்

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார்.

இவரிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் இந்த சீசனில் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

கிட்டத்தட்ட 10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர் சென்னை பிட்சிலேயே விக்கெட்கள் எடுக்க சிரமப்பட்டார். எனவே இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் ஐபிஎல்லில் இருந்தும் இவர் ஓய்வை அறிவிக்கலாம் என கூறாப்படுகின்றது.

Share This