கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் இன்மையால் சிக்கல்

இலங்கையின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக வைத்தியசாலையுடன் தொடர்புடைய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பணிப்பாளர் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளராக பதவி உயர்வு பெற்ற பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பதில் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நிரந்தர பணிப்பாளர் இன்மையால் வைத்தியசாலையின் சில பிரிவுகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சுமார் 1500 வைத்தியர்கள் மற்றும் 200 வைத்திய நிபுணர்கள் பணிபுரிகின்றனர்.
மேலும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 25,000 என்றும் கூறப்படுகிறது.