யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தி சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தி சிக்கி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மந்திகை பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This