இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

இலங்கையில் இருந்து 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்குள் நுழைந்து, யாழ்ப்பாணப் பகுதியில் சட்டவரோதமாக தங்கியிருந்த 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த அனைவரும், குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறியுள்ளதாக தெரிவித்து குடியகல்வுத் துறை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தின் மாதகல் பகுதியில் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மதப் பிரச்சார சேவையை நடத்தத் தயாராகி வந்தனர், மேலும் அந்தப் பகுதியில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளால் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1172 மூலம் நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும் எட்டுப் இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டு, பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இதேபோல், யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த மேலும் ஐந்து இந்தியர்கள் பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இந்தக் கைது, மேலதிக விசாரணை மற்றும் நாடுகடத்தல் ஆகியவை குடிவரவு மற்றும் குடியகல்வு பணிப்பாளர் நாயகம் நிலுஷா பாலசூரியவின் மேற்பார்வையின் கீழ் அதிகாரிகள் குழுவால் மேற்கொள்ளப்பட்டன.

 

Share This