மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (03) பிற்பகல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களுக்கு இந்த சந்தேக நபர் 12 T-56 துப்பாக்கி வெடிமருந்துகளை வழங்கியதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 18ஆம் திகதி நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

அதன்படி, இந்தக் குற்றச் செயல் தொடர்பாக இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This