மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு – மகனும் பலி Update

மகனும் பலி
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனும் உயிரிழந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார்.
ஒன்பது வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
மித்தெனிய, கடவத்த சந்தி பகுதியில் நேற்று (18) இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சம்பந்தப்பட்ட நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.
பின்னர், தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டியவில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், மகளும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு; தந்தையும் மகளும் பலி
மித்தெனிய பொலிஸ் பிரிவின் கடேவத்த சந்தியில் நேற்று (18) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் தந்தையும் அவரது ஆறு வயது மகளும் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இறந்தவரின் மகனும் மகளும் காயமடைந்தனர்.
இதனையடுத்து, மகள் தங்காலை வைத்தியசாலையிலும், மகன் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.