
இலங்கை நாடாளுமன்றத்தில் 08 ஆம் திகதி வியட்நாம் ஜனாதிபதி உரை
வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 07 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுத்த அழைப்பின் பிரகாரமே இரு நாள் பயணமாக அவர் கொழும்பு வருகின்றார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.
8 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என தெரியவருகிறது.
அதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி எதிர்வரும் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
இவ்விஜயத்தின்போது இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
TAGS வியட்நாம் ஜனாதிபதி
