ஆண்டின் முதல் 03 மாதங்களில் பல மில்லியன் ரூபாவை கடந்த சுற்றுலா வருவாய்

நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 165,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
887,389 ஆகும்.
இதனிடையே ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுற்றுலா வருவாய் 1,122 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.