இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை – லெபனான் அமைச்சர்

இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவமானம் இல்லை – லெபனான் அமைச்சர்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதும், நிலப்பரப்பை மீட்பதும் இலக்காக இருந்தால், இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அவமானம் ஏதுமில்லை என்று லெபனானின் வெளியுறவு அமைச்சர் யூசெஃப் ராகி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், லெபனான் யாருக்கும் அடிபணியவில்லை, எந்தவொரு அச்சு அணியின் கையில் உள்ள துருப்புச்சீட்டும் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லண்டன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லெபனானின் பேச்சுவார்த்தைக்கான முடிவு, சிலர் சித்தரிக்க முயற்சிப்பது போல சரணடைதல் அல்ல, மாறாக அது தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவி என்று யூசெஃப் ராகி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், இஸ்ரேலுடன் கையாள்வதில் லெபனான் பலவீனமாக இருப்பதாகச் சித்தரிப்பவர்களை அவர் கடுமையாக சாடியுள்ளார்.

லெபனானை முற்றிலும் பலவீனமான நிலையில் சித்தரிப்பது ஒரு பெரும் தவறு, அதேபோல சரணடையும் நிலையில் இருப்பதாகச் சித்தரிப்பதும் தவறானதே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லா மீதும் ராகி தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும், அமைச்சர் லெபனானுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு தெளிவான கோட்டை வகுத்து, லெபனானின் வழிமுறை இப்போது ஈரானிய வழிமுறையிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது என்றும், லெபனானின் நலன்கள் இனி ஈரானிய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்திற்கோ அல்லது முட்டுக்கட்டைக்கோ பணயக்கைதிகளாக இல்லை என்றும் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )