இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு

இஸ்ரேல், லெபனானுக்கிடையிலான போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இரு நாட்டு அதிகாரிகளுடனும் அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகாரப்பூர்வ தகவலை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கம் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த காலநீட்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்காலிகமாகத் தவிர்க்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )