சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மே மாதத்தில் மாத்திரம் 132,919 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் பதிவான 129,466 என்ற முந்தைய சாதனையையும் முறியடித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டு மே மாத்தில் பதிவான சுற்றுலாப் பயணிகளின் வருகை
18.5% ஆக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.7% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இந்த அதிகரிப்பு சுற்றுலாத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்
மே மாத்தில் மாத்திரம் 47,001 பயணிகள் இந்தியாவிலிருந்து நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.