தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி

தனியாரால் 72,000 மெட்றிக் டொன் அரிசி இறக்குமதி

இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இன்று  (27) வரையில் இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட 72,000 மெட்றிக் டொன் அரிசியில் 32,000 மெட்றிக் டொன் பச்சை அரிசியும், 40,000 மெட்றிக் டொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாகவும், மேலும், சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அருக்கொட குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் கடந்த 4ஆம் திகதி வழங்கியது.

CATEGORIES
TAGS
Share This