மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெகுளுவெல பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வௌ்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்த நபர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெகுளுவெல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருடன் பணிபுரிந்த மற்றுமொரு நபரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This