காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 78 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் காசாவின் அல்-மவாசியின் பாதுகாப்பான மண்டலத்திலுள்ள 36 பேர் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கத்தாரில் ஹமாஸுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள போதிலும் காசா மீது புதிய தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.
பாக்தாத்தில் உள்ள அரபுத் தலைவர்கள் காசா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையிடப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலகளாவிய நடவடிக்கைக்கும் அழைப்பு விடுக்கின்றனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60,000 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 120,673 ஆக அதிகரித்துள்ளது.