பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்

பாகிஸ்தானுக்கு எதிரான ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வழிநடத்திய பெண்

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, கேர்னல் சோபியா குரேஷியின் பெயர் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேர்னர் சோபியா குரேஷி நிலைமையை விளக்கியிருந்தார்.

கர்னல் சோபியா குரேஷி இந்திய இராணுவத்தின் சிக்னல்கள் படைப்பிரிவில் ஒரு மூத்த அதிகாரி. குஜராத்தைச் சேர்ந்த சோபியா, உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.

சோபியாவும் ஒரு இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்களின் தாத்தா இந்திய இராணுவத்தில் பணியாற்றினார். அவரது கணவரும் இந்திய இராணுவத்தில் உறுப்பினராக உள்ளார்.

2006 ஆம் ஆண்டில், சோபியா ஐ.நா. அமைதி காக்கும் பணியின் ஒரு பகுதியாக பணியாற்றினார்.

அவர் ஐ.நா.வில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 2016 ஆம் ஆண்டு ஆசியான் பிளஸ் இராணுவப் பயிற்சியில் குரேஷி இந்தியாவை வழிநடத்தினார்.

இறுதியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிரான தாக்குதல்களிலும் இந்திய இராணுவம் பெண் சக்தியான சோபியா குரேஷியை பயன்படுத்தியது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்ததாக இராணுவம் அறிவித்தது.

ஒபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் இராணுவ நிலைகள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும் இராணுவம் தெளிவுபடுத்தியது.

இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 55 பேர் காயமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரும் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Share This