Category: இலங்கை
பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் – அமைச்சர் பிமல்
பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் ... Read More
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிக்கொணரப்படுவார்கள்
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தெய்யந்தர பகுதியில் தற்போது ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க விசேட வேலைத்திட்டம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பெண்கள் மற்றும் ... Read More
யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கும், திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளது. திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் ... Read More
யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் 9 கிலோ 300 கிராம் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட ... Read More
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை ... Read More
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவியை கைவிடும் ரணில் தரப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் ‘யானை’ சின்னத்தின் கீழ் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), அதன் குழுவிலிருந்து மேயர் வேட்பாளரை நியமிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. கட்சியின் ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை அமர்வு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 24 மனுக்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்ட ஆலோசனை அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் தொடர்புடைய சட்ட விதிகள் மற்றும் எடுக்கப்பட்ட ... Read More
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை
நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வாநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ... Read More
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைப்பு
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் சர்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக ... Read More
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முதல் டின் மீன் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் முதல் டின் மீன் ஏற்றுமதி தொகுதி நேற்று மதுரங்குளியவில் உள்ள ஓஷன் ஃபுட் தொழிற்சாலை வளாகத்தில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல் வள ... Read More
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் நன்கொடை வழங்கிய இலங்கையர்
இலங்கையர் உட்பட மூன்று நன்கொடையாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) 2.45 கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர் தலா ஒரு கோடி ... Read More












