Category: இலங்கை

வெள்ளவத்தையில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

admin- December 15, 2024

வெள்ளவத்தையில் கொக்கெய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலிங்வூட் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் 36 கிராம் கொக்கெய்ன் மற்றும் 203 கிராம் ... Read More

இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு

admin- December 15, 2024

இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள்,  வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட ... Read More

இலங்கையில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு

Mano Shangar- December 15, 2024

இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண் தன்னார்வ ... Read More

ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு நாளை

admin- December 15, 2024

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக மற்றும் ... Read More

விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்

Mano Shangar- December 15, 2024

சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் ... Read More

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- December 15, 2024

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

admin- December 14, 2024

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 46,934 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இதன்படி, மேல் ... Read More

மாளிகாகந்தயில் துப்பாக்கி பிரயோகம் – பெண் ஒருவர் காயம்

admin- December 14, 2024

கொழும்பு மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அடையாளந்தெரியாத நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந்தெரியாத நபர் துப்பாக்கி ... Read More

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்

admin- December 14, 2024

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள மின்சார உற்பத்திக்கான எரிபொருள் விலை தொடர்பான அறிக்கையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் ... Read More

போர் பயிற்சியில் ஈடுபட இந்திய சென்ற இலங்கை கடற்படை குழு

Nishanthan Subramaniyam- December 14, 2024

இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படைக்கு இடையிலான இருதரப்பு 'SLINEX - 2024' கடற்படை பயிற்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் ... Read More

சபாநாயகரின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்

admin- December 14, 2024

சபாநாயகர் அசோக ரன்வலவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் ... Read More

புதிய சபாநாயகர் யார்? மூன்று பேரின் பெயர்கள் முன்மொழிவு

Nishanthan Subramaniyam- December 14, 2024

வெற்றிடமாகவுள்ள சபாநாயகர் பதவிக்கு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, நாடாளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பட்டி, லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோரின் பெயர்கள் ... Read More