Category: இலங்கை

வானிலை முன்னெச்சரிக்கை – மின்னல் தாக்கம் அதிகரிக்கலாம்

Sylvester Dorin- January 22, 2025

கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய ... Read More

உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

Kanooshiya Pushpakumar- January 22, 2025

உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், ... Read More

அண்மையில் அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்கள்- விசேட அறிக்கை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

அண்மைய நாட்களில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சந்தேகத்தின் பேரில் ஒரு இராணுவ மேஜர், ஆறு இராணுவத்தினர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் ஒரு சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் கைது ... Read More

முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு இலட்சத்தை கடந்தது

Nishanthan Subramaniyam- January 21, 2025

2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், 112,415 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். அவர்களில் 19,353 பேர் இந்தியர்கள் என்பதுடன் 17,225 ரஷ்யர்களும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா ... Read More

அர்ச்சுனா எம்பியை கைது செய்ய உத்தரவு

Sylvester Dorin- January 21, 2025

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே ... Read More

2025ஆம் ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

Nishanthan Subramaniyam- January 21, 2025

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அரச போசாக்கு வேலைத்திட்டத்தை மேலும் திட்டமிட்ட வகையில் 2025 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தவும், ஆண்டுக்கான உயர்ந்தபட்சம் 1.5 மில்லியன் மாணவர்கள் பயனடையக்கூடிய வகையில் வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்குவதற்கும் அமைச்சரவை ... Read More

எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறையும்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப எதிர்வரும் இரு வாரங்களின் பின்னர் பொருட்களின் விலை குறைவடையும் என அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழில் துறையின் மின்சாரக் கட்டணத்தை 30 வீதமாக ... Read More

சிஐடியில் இருந்து வெளியேறினார் மனுஷ நாணயக்கார

Kanooshiya Pushpakumar- January 21, 2025

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இன்று (21) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி சுமார் 6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More

2023 இல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கு இலாபம்

Kanooshiya Pushpakumar- January 21, 2025

2023ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவை இலாபம் ஈட்டியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக பதிலளிக்கப்படும் ... Read More

சரிவடைந்து வரும் கோழி இறைச்சி விற்பனை

Kanooshiya Pushpakumar- January 21, 2025

மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததால், கோழி இறைச்சியின் தினசரி விற்பனை 100 மெட்ரிக் தொன் குறைவடைந்துள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச்.குணசேகர தெரிவித்தார். வழக்கமாக ஒரு நாளைக்கு 600 மெட்ரிக் ... Read More

அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உலக வங்கி நிதி, தொழில்நுட்ப உதவி

Nishanthan Subramaniyam- January 21, 2025

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி ... Read More

ஜொன்ஸ்டன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு – ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- January 21, 2025

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கானது ஜூன் 3 ஆம் திகதி, சாட்சி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று ... Read More