Category: இலங்கை
முதல் இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த ... Read More
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை சமர்ப்பிப்பு
2025 ஆம் நிதியாண்டுக்கான புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாளை திங்கட்கிழமை (17.02) காலை 10.30 மணிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வரவு செலவுத் ... Read More
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் பதற்றம்
யாழ்ப்பாணத்தில் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் விடுவிக்கபடாத வலி வடக்கு காணிகள் தொடர்பாக காணி உரிமையாளர்கள் கேள்வி கேட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பிரதமர் ஹரினி அமரசூரிய பங்கேற்ற தேசிய மக்கள் சக்தியின் உடுவில் தொகுதி ... Read More
பெருமளவான போதைப் பொருளுடன் கனேடிய பெண் கைது
சுமார் 360 மில்லியன் ரூபா மதிப்புள்ள "ஹாஷிஷ்" போதைப்பொருளுடன் ஒரு வெளிநாட்டுப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். 36 வயதான கனடியப் பெண் நேற்று இரவு கனடாவின் டொராண்டோவிலிருந்து வந்தபோது சுங்க ... Read More
நால்வரின் உயிரைப் பறித்த கோர சாலை விபத்துகள்
நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல சாலை விபத்துகளில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (15) திக்வெல்ல, இப்பலோகம, வென்னப்புவ மற்றும் மீகொட பொலிஸ் பிரிவுகளில் ... Read More
மியான்மரில் சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த 13 இலங்கையர்கள் மீட்பு
மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 இலங்கையர்களில் மொத்தம் 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட நபர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 11 இளைஞர்கள் மற்றும் இரண்டு ... Read More
யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு பிரதமர் விஜயம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்டார். அதிபர் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மாணவர்களின் இணைப்பாட விதான செயற்பாடுகளையும் பார்வையிட்டார். ... Read More
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை – அமைச்சர் சரோஜா போல்ராஜ்
ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்புக் குழு தனது ஒன்பதாவது அறிக்கை தொடர்பான பரிசீலனையை நிறைவு செய்துள்ளது. குறித்த அமைப்பின் பிரதிநிகளுக்கும் இலங்கையின் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அடங்கிய ... Read More
தேசிய மக்கள் சக்தியின் எம்.பியின் உறவினருக்கு விளக்கமறியல்
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலின் உறவினரை பெப்ரவரி 17 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்க மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வென்னப்புவவில் நேற்று (14) நடந்த விபத்து ... Read More
எல்ல – வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம்
எல்ல - வெல்லவாய வீதியில் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராவணெல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பாறைகள் உறுதியற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ... Read More
பொலிஸாரின் செயற்பாட்டை கண்காணிக்க புதிய திட்டம்
பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான புதிய திட்டமொன்றை, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல், துப்பாக்கிச் சூடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பது பொலிஸ் அதிகாரிகள் பொறுப்பு ... Read More
மூத்த ஊடகவியலாளர் பாரதிக்கு மலையகத்தில் அஞ்சலி
மூத்த ஊடகவியலாளர் அமரர். இராஜநாயகம் பாரதிக்கு நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று காசல்ரீ பகுதியில் உள்ள சமஹவுஸ் விருந்தகத்தில் நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ... Read More












