167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி நெருக்கடிக்கு தீர்வாக நேற்று நள்ளிரவு நிலவரப்படி  167,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 66,000 மெட்ரிக் தொன் பச்சையரிசி மற்றும் 101,000 மெட்ரிக் தொன் புழுங்கல் அரிசி ஆகியவை உள்ளடங்குகின்றன.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெட்ரிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கம் தெரிவித்துள்ளது.

அரிசி இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமையால் குறித்த அரிசியை விடுவிக்க, அரசாங்கம் அரிசி இறக்குமதிக்கான காலத்தை நீட்டிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி மற்றும் பச்சையரிசி தட்டுப்பாடு ஏற்பட்ட சூழலில், இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )