115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

115,000 மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி

இறக்குமதி அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியதன் பின்னர் இன்று (8) மாலை வரையில் 115,000 மெட்றிக் தொன் அரிசி துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட தெரிவித்தார்.

குறித்த 115,000 மெட்றிக் தொன் இறக்குமதி அரிசித் தொகையில் 45,000 மெட்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 70,000 மெட்றிக் தொன் நாட்டு அரிசியும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுங்கத்திற்கு அனுப்பப்படும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியானது விரைவில் விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு எதிர்நோக்கும் அரிசி நெருக்கடிக்கு தீர்வாக, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை தனியார் துறையினருக்கு தற்போதைய அரசாங்கம் டிசம்பர் 4 ஆம் திகதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )