இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேங்காய் எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு காரணமாக கடந்த வாரமும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து கடந்த வாரம் 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

அத்துடன், சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும், தேநீர் வகைகள் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )