எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண்

எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண்

உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய சூழலில், கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர்களாக இருந்தபோது, ​​பெட்ரோல் 92 லீற்றருக்கு 371 ரூபாவாகவும், டீசல் 363 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் 262 ரூபாவாகவும் இருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய உலகளாவிய நிலைமை மிகவும் சவாலானது என்றும், தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் முக்கிய எரிசக்தி விநியோக வழிகளைப் பாதித்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாயொன்றுக்கு அமெரிக்க டொலர் 100 இற்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காணப்பட்டதை விட உள்நாட்டு எரிபொருள் விலைகளை இலங்கையால் குறைவாக வைத்திருக்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

உலகளாவிய எரிசக்தி நிலையற்ற தன்மையால் உருவாக்கப்பட்ட அழுத்தங்களை அரசாங்கம் புரிந்துகொள்கிறது என்றும், நாட்டின் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மையை உறுதிசெய்து நிலைமையை கவனமாக நிர்வகிக்கும் என்றும் ஹேமசந்திரா மேலும் கூறினார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )