
பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது
பெண்கள் மற்றும் பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கனடா முழுவதும் பலமுறை மக்களை சங்கடப்படுத்தும் வகையில் பொது இடங்களில் அணுகி காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனிநபர்களை சங்கடப்படுத்தும் விதத்தில் காணொளிகளை பதிவு செய்வதில் பெயர் அவர் பெற்றவர் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் பல்வேறு சந்தரப்பங்களில் சந்தேகநபர் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பொலிஸார் முகமது-ராசிக்கை சந்தேக நபராக அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்,
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தகவல் அளிக்கு முன்வருமாறு விசாரணையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
