மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது சரிந்து வீழ்ந்த மரம் – ஒருவர் பலி

மாவனெல்லை – ரம்புக்கனை வீதியில் முச்சக்கர வண்டியொன்றின் மீது மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலகொல்ல பகுதியில் இந்த சம்பவம் நேற்று இரவு (23) இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் குழந்தை உட்பட நால்வர் சிக்கியிருந்த நிலையில் அவர்களை
பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டனர்.
இதன்போது காயமடைந்த இரண்டரை வயது குழந்தை, பெண் உட்பட மூவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் 37 வயதான முச்சக்கர வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த இரண்டரை வயதான சிறுமி, 48 வயதான பெண் மற்றும் 57 வயதான ஆண் ஒருவர் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மரம் சரிந்து வீழ்ந்ததில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுக்கும் அருகில் இருந்த கடை ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மரம் வீழ்ந்ததன் காரணமாக மாவனெல்லை – ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் தற்போது போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே, மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
