வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை

வடமராட்சி கரணவாய் பகுதியில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கரணவாய் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
