உயர் தரப் பரீட்சைகளுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

உயர் தரப் பரீட்சைகளுக்கான அனைத்துப் பணிகளும் பூர்த்தி – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எந்தவொரு விண்ணப்பதாரரும் தங்கள் அனுமதி அட்டையில் திருத்தங்கள் கோரினால் உடனடியாக திணைக்களத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

மொத்தம் 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

246,521 பாடசாலை மாணவர்களும், 94,004 தனியார் விண்ணப்பத்தார்களும் பரீட்சைக்கு தோற்ற தகுதிப் பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் 2,365 தேர்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், தேர்வை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதனிடையே, உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு நேற்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் முடியும் வரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

தடை காலத்தில் சமூக ஊடங்களில் போலி வினாத்தாள்கள் போன்ற இடுகையிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஊடகா தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This